குழந்தைகள் விரும்பி உண்ணும் புலாவ்
தேவையான பொருள்கள்:
1. அரிசி
2. காரட்
3. இஞ்சி
4. கசகசா
5. சீரகம்
6. கரம் மசாலாப் பவுடர்
7. மிளகாய்ப் பொடி
8. நெய்
9. பட்டாணி
10. உருளைக் கிழங்கு
11. வெங்காயம்
12. பச்சை மிளகாய்
13. காலிப்ளவர்
14. தேங்காய்
15. கொத்து மல்லி
16. எண்ணெய்
செய்முறை:
1. பட்டாணி, காரட், காலிப்ளவர், உருளைக் கிழங்கு இவற்றை சிறிது பெரிய துண்டுகளாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, கொஞ்சம் தண்ணீர் விடவும்.
2. இப்போது அடுப்பை சிறிது தணிய வைக்கவும்.
3. காய் கறிகள் பாதி வெந்தவுடன் மிளகாய்ப் பொடி போட்டு, உப்பு வேண்டிய அளவு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி இவற்றைப் போடவும்.
4. முக்கால் அளவுக்கு வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கித் தண்ணீரை ஓட்ட வடித்து விட வேண்டும்.
5. இப்போது அரிசியைச் சிறிது நெய்யில் வறுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு உடன் உப்பு போட்டு வேக வைத்து சாதம் ஆக்க வேண்டும்.
6. நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு மூடி தேங்காய்த் துருவல், இஞ்சி, கசகசா, சீரகம் இவற்றை எல்லாம் பச்சையாக தண்ணீர் விடாமல் மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
7. இன்னொரு வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி, நெய்யில் நன்றாக வதக்கி, அதனுடன் வேக வைத்த காய்கள், சாதம், அரைத்த மசாலா உட்பட எல்லாவற்றையும் போட்டுக் கிளறி, அரை ஸ்பூன் கரம் மசாலாப் பவுடரை போட்டு இரண்டு நிமிடங்கள் அடுப்பில் வைத்துக் கிளறி இறக்கி வைத்துப் பச்சை கொத்தமல்லியைப் போடவும்.
பொதுவாக புலாவ் போன்றவற்றில் அதிகமான காய் கறிகளை சேர்த்து அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் உடல் ரீதியாக பல நன்மைகளை தரும்.
Comments
Post a Comment